நூற்றாண்டு கடந்த வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்கள்
நாகை மாவட்டம் திருக்குவளை அருகே நூற்றாண்டு கடந்த வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின், ஆண்டு விழா நடைபெற்றது. இப்பள்ளியின் கலையரங்கில், ஆண்டு விழா பள்ளி மேலாண்மை குழு தலைவர் ம.மீனாட்சி தலைமையில் நடைபெற்றது. கொடியாலத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி ஐயப்பன் மற்றும் ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகவடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சீ. முரளி வரவேற்றார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மை குழு துணைத் தலைவர் கண்ணதாசன், பள்ளி மேலாண்மை குழு முன்னாள் தலைவர் கார்த்திகா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பிரகாஷ், பள்ளி ஆசிரியர்கள் சு.சேவுராஜன், ஆ.புஷ்பா, வீ.கணேசன், தன்னார்வ ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட, கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர்கள் வே.சிவகுமார், ரா.அன்பழகன் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினர். முடிவில், பள்ளி ஆசிரியர் தெ.ஐயப்பன் நன்றி கூறினார்.
Next Story