பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத, சங்க விரோத நடவடிக்கைகளை கண்டித்து

X
பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் உள்ள பல்வேறு பிரச்னைகளை, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனுவாக எழுதி எடுத்துச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். மனுவைப் பெற்ற மாவட்ட ஆட்சியர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் பரிசீலனை செய்யாததோடு கோரிக்கை மனு கசக்கி குப்பைக்கூடையில் வீசி, மனு கொடுக்கச் சென்ற அலுவலர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ்வின் ஊழியர் விரோத, சங்க விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணித்து வட்டார தலைவர் கலைவாணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினர். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை, கீழ்வேளூர், வேதாரணயம், தலைஞாயிறு, கீழையூர் ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story

