திருமருகல் ஒன்றியம் மேலப்பூதனூரில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில்

திருமருகல் ஒன்றியம் மேலப்பூதனூரில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில்
X
30 -வது தேசிய மாநாட்டிற்கு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி வரவேற்பு
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 30-வது தேசிய மாநாடு வருகிற 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நாகையில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில், மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தை, நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேலப்பூதனூர் பகுதியில், விவசாய சங்க நிர்வாகிகள் கலியபெருமாள், வரதராஜன் ஆகியோர் தலைமையில், விவசாய சங்க மாநில குழு நிர்வாகி தங்கையன் தொடங்கி வைத்தார். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ், நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று, மாநாட்டில் கலந்து கொள்ளும்படி, மாநாட்டு துண்டு பிரசுரங்களை வழங்கி வரவேற்றனர்.
Next Story