பரமத்தி அருகே ஆண் பிணம் போலீசார் விசாரணை.

பரமத்தி அருகே ஆண் பிணம் போலீசார் விசாரணை.
X
பரமத்தி அருகே ஆண் பிணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர், ஏப்.4: கரூரில் இருந்து நாம்க்கல் செல்லும் பைபாஸ் சாலையில் பரமத்தி அருகே உள்ளகோனூர் மேம்பாலம் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக கோனூர் கிராம நிர்வாக அலுவலர் பிரியா பரமத்தி போலீ சில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த ஆணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story