பிலிக்கல்பாளையம் ஏல சந்தையில் வெல்லம் விலை உயர்வு.

பிலிக்கல்பாளையம் ஏல சந்தையில் வெல்லம் விலை உயர்வு.
X
பிலிக்கல்பாளையம் ஏல சந்தையில் வெல்லம் விலை உயர்வடைந்துள்ளது.
பரமத்திவேலூர், பிப்,4-பிலிக்கல்பாளையம் ஏல சந்தையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் அச்சுவெல் லம் விலை உயர்வடைந்துள்ளது. பரமத்திவேலூர் வட்டாரத்தில் ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்திவேலூர்,பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதி களில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளை யும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையா ளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, பிலிக் கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏல சந் - தைக்கு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்லஏல் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது. வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங் களில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல் கின்றனர். கடந்தவாரம்நடைபெற்ற ஏலத்தில் 30கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,440 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,360 வரையிலும் ஏலம் போனது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,400 வரையிலும், அச்சு வெல்லம் விலை உயர்ந்து சிப்பம் ஒன்று ரூ.1,440 வரையிலும் ஏலம் போனது.
Next Story