முத்தூரில் இரு பைக் மோதி ஒருவர் பலி

X
முத்தூர் அருகே ரங்கப்பையன்காடு, அத்தப்பம்பாளையம் புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 63). இவர் நேற்று மாலை முத்தூர்-காங்கேயம் சாலை, ராசாத்தாவலசு பஸ் நிறுத்தம் அருகில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென்று எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த அடிபட்டு காயம் அடைந்த பழனிச்சாமியை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பழனிச்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இது பற்றிய புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

