ஆசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்

ஆசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்
X
கன்னியாகுமரி
ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும், கல்வித்துறையில் ஆட்சியர் உட்பட கல்வி சாரா அலுவலர்களின் நெருக்கடிகளை தவிர்த்திட வலியுறுத்தியும் தமிழ்நாடு முதுநிலை பட்டாதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்யும் நிகழ்வு நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் பெத்தலகேம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.      காலையில் மையத்திற்கு வந்த ஆசிரியர்களுக்கு கோரிக்கை அட்டையும் துண்டு பிரதியும் வழங்கப்பட்டன. தவறிழைக்காத ஆசிரியர்கள் மீது போடப்படும் பொய் வழக்குகளால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்கு உரிய நீதி விசாரணையும் பணிப் பாதுகாப்பும் வேண்டும். 22 ஆண்டுகளுக்கு மேல் போராடிவரும் வாழ்வாதார உரிமையாளர் பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தம் மையங்களில் ஆசிரியர்கள் கோரிக்கை அட்டைகளை அணிந்து மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்டனர்.       தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் பென்னட் ஜோஸ்,  கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள், வட்டார நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
Next Story