ராணிப்பேட்டை அருகே சிறுவன் பாம்பு கடித்து பலி

ராணிப்பேட்டை மாவட்டம் வேடல் கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவர் மகன் தருண் 15 நேற்று வீட்டின் அருகில் இருந்த போது அவரை பாம்பு கடித்தது. உறவினர்கள் சிறுவனை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே தருண் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story

