தூக்குப்போட்டு பெண் தற்கொலை

X
பொங்கலூர் அருகே உள்ள வடக்கு அவினாசிபாளையம் வேலம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி நவநீதம் (வயது47). இவர் கடந்த மூன்று மாதங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அவினாசிபாளையம் போலீசார் நவநீதத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
Next Story

