ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு!

ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு!
X
ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமியை முன்னிட்டு இன்று மூலவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
வேலூர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமியை முன்னிட்டு இன்று மூலவருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story