ரயில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

ரயில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
X
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் ரயில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
இருகூரில் பழுதடைந்த தங்கும் அறையில் தங்க மாட்டோம். இருகூரில் உள்ள ரயில் டிரைவர்கள் தங்கும் அறையை மூட வேண்டும். கூட்ஸ் ரயில் ஓட்டும் ரயில் டிரைவர்களை கோவை டிப்போவில் உடனடியாக பணியமர்த்த வேண்டும். கோவையில் கூட்ஸ் டிப்போ திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய லோகோ (ரயில் இன்ஜின்) ஓடும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஈரோடு கிளை செயலாளர் ப்ரோஸ் ரகுமான் தலைமை வகித்தார். மண்டல துணை செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில் ரயில் டிரைவர்கள், துணை டிரைவர்கள் பலர் பங்கேற்றனர்.
Next Story