வெகு விமர்சையாக நடைபெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம்.

திருவாரூர் மாவட்டத்தில் மிக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி ஆலயத்தின் ஆழித்தேரோட்டத்தினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வடம் பிடித்து துவக்கி வைத்தார்.
சைவத் தலங்களில் முதன்மை தலமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சுவாமி வீதி உலா காட்சிகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்றைய தினம் நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி தியாகராஜர் நேற்று இரவு அஜபா நடனத்துடன் கோயிலில் இருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது.மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், காவல் கண்காணிப்பாளர் கருன் கரட், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் மற்றும் இன்றி வெளி மாநிலங்களையும் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஆரூரா தியாகேசா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
Next Story