தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்துறை அலுவலக சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணி தன்மையினை கருத்தில் கொண்டு அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்றும் ,மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், கருணை அடிப்படையில் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் ,தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்ததால் சரண் விடுப்பு வழங்குதல் ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் ,அரசின் சிறப்பு திட்டங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணும் நேர்வில் அனைத்து வட்டங்களிலும் சிறப்பு துணை வட்டாட்சியர் பணியிடம் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story