தலைமறைவு குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

X

நீதிமன்றம்
கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ஓட்டுநருக்கு பிடியாணை பிறப்பித்தும் ஆஜராகததால் அவரை நீதிமன்றம் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, அடுத்த மாதம் 5- ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 52). ஓட்டுநராக வேலை பார்த்து வந்த இவர் கடந்த 1999-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு தஞ்சை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தார். மேலும் செந்தில் தொடர்ந்து போலீசாரிடம் காவல்துறையினரால் பிடிபடாமல் தலைமறைவாக இருந்ததால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வரும் செந்திலை பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால் செந்திலை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, அடுத்த மாதம் (மே) 5-ஆம் தேதிக்குள் செந்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று திருவையாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story