சேலம் சோனா கல்லூரியில் தேசிய அளவில் கல்லூரி மாணவர்களுக்கான கலை விழா போட்டி

சேலம் சோனா கல்லூரியில் தேசிய அளவில் கல்லூரி மாணவர்களுக்கான கலை விழா போட்டி
X
17-ந் தேதி நடைபெறுகிறது.
சேலம் சோனா கல்லூரியில் தேசிய அளவில் கல்லூரி மாணவர்களுக்கான கலை விழா போட்டிகள் வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. இதுதொடர்பாக நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைவிழா போட்டிக்கான போஸ்டர் வெளியிடப்பட்டது. அப்போது போட்டி விதிமுறைகள் குறித்து முதன்மை ஒருங்கிணைப்பாளர் ரேணுகா எடுத்துரைத்தார். இதில் ஒருங்கிணைபாளர் செந்தில்வடிவு மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே இந்த கலை விழா போட்டி குறித்து கல்லூரி முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் கூறியதாவது:- சோனா கல்லூரியில் தேசிய அளவில் கல்லூரி மாணவர்களுக்கான கலை விழா போட்டிகள் வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. இதில் கல்லூரி மாணவர்களுக்கான புகைப்படம் எடுத்தல், பாடல், பேஷன் ஷோ, நடனம், குறும்படம் உள்ளிட்ட பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகளில் பங்கேற்க அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய அளவில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். கல்லூரி மாணவர்களின் தனி திறன்களை அறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இதுபோன்ற போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். எனவே இந்த வாய்ப்பை கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story