வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில்:சௌமியா அன்புமணி திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவம் 7-நாள் கமலத் திருத்தேரோட்டம் சிறப்பு பூஜை உடன் திருக்கோயில் நிர்வாகத்தினர் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர் திரளான பக்தர்கள் மற்றும் சௌமியா அன்புமணி திருத்தேர் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உடன் இணைந்த ** திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் தமிழ் மாதம் பங்குனி -14 மார்ச் 28ஆம் தேதி சிறப்பு பந்த கால் பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான பங்குனி பிரம்மோற்சவம் தேரோட்டம் கமல தேரில் அருள்மிகு ஸ்ரீ சோமாஸ்கந்தர் சிறப்பு புஷ்பா அலங்காரத்தில் எழுந்தருளினார் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் /செயல் அலுவலர் ரமணி, அறங்காவலர்;- சுரேஷ் ஆகியோர் பச்சைக்கொடி அசைத்து திருத்தேரை தொடங்கி வைத்தனர் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து முக்கிய வீதிகளில் சாமி உலா திருத்தேர் நிகழ்வு நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி அவரது மனைவி சௌமியா இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார் சாமி தரிசனம் செய்தார் அவருக்கு மலர் மாலை பிரசாதங்கள் வழங்கப்பட்டது மேலும் கமலத் திருத்தேர் ஓட்டம் வடம் பிடித்து தேர் இழுத்தார் நிகழ்ச்சியின் செய்தியாளர்கள் சந்திப்பில் சௌமியா அன்புமணி தமிழகத்தில் பங்குனி மாதம் என்றால் அனைத்து கோயில்களும் சிறப்பு பூஜைகள் சிறப்பு விழாக்கள் நடைபெறுவது மகிழ்ச்சியான ஒன்று மேலும் இந்த சிறப்பு வாய்ந்த திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழாவில் பங்கேற்று திருத்தேர் நிகழ்ச்சியில் பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி மேலும் 2025 மே 11 சித்திரை முழு நிலவு வன்னியர் திருவிழா நிகழ்ச்சி வெற்றி பெற சிறப்பு அழைப்பிதழ் வன்னியர் சொந்தங்களுக்கு வழங்கி வன்னியர் நண்பர்களுக்கு வழங்கி அழைப்பிதழ் மூலமாக அழைத்தோம் பங்குனித் திருவிழாவில் அனைவரும் மகிழ்ச்சியான திருவிழாவாக அனைத்து கோயில்களிலும் சிறப்பானதாக அனைவரும் நலம் பெற வேண்டி வேண்டிக் கொண்டேன் என்று சௌமியா அன்புமணி தெரிவித்தார்... இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..
Next Story






