உத்தமபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

உத்தமபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி
X
விசாரணை
அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் சண்டிவீரன் (43). இவர் டீக்கடையில் பணியாற்றி வரும் நிலையில் நேற்று (ஏப்.7) டீக்கடைக்கு பின்புறம் சிறுநீர் கழிக்க சென்ற போது, அங்கிருந்த கம்பி ஒன்றை எடுத்து வைக்க முயற்சித்துள்ளார். கம்பியின் ஒரு பகுதி அங்கிருந்த மின் மீட்டர் மீது உரசி மின்சாரம் கம்பியில் பாய்ந்தது தெரியாமல் கம்பியை தொட்டவுடன் சண்டிவீரன் தூக்கி வீசப்பட்டு பலியானார். உத்தமபாளையம் போலீசார் விசாரணை.
Next Story