பொது மக்களிடம் மனுக்களை பெற்ற மேயர்.

பொது மக்களிடம் மனுக்களை பெற்ற மேயர்.
X
மதுரையில் மத்திய மண்டலத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் , மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் இன்று (ஏப்.8) நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், சொத்துவரி திருத்தம் தொடர்பாக 14 மனுக்களும், சொத்துவரி பெயர் மாற்றம் வேண்டி 18 மனுக்களும், புதிய வரிவிதிப்பு வேண்டி 3 மனுக்களும், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் வரி திருத்தம் மற்றும் நீக்கம் தொடர்பாக 33 மனுக்களும், சுகாதாரம் தொடர்பாக 12 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி 8 மனுக்களும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 2 மனுக்களும் என, மொத்தம் 90 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால், நேரடியாக பெறப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்.
Next Story