மகாவீர் ஜெயந்தி தினமான ஏப்ரல் பத்தாம் தேதி அன்று டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் உரிம ஸ்தலங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது

X

மகாவீர் ஜெயந்தி தினமான ஏப்ரல் பத்தாம் தேதி அன்று டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் உரிம ஸ்தலங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (FL1) மற்றும் FL2/FL3/FL3A/FL3AA மற்றும் FL 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules,1981-ன்படி, மகாவீரர் ஜெயந்தி தினமான 10.04.2025 (வியாழக்கிழமை) அன்று தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (FL1) மற்றும் FL2/FL3/ FL3A/FL3AA மற்றும் FL11 மதுபான உரிம ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (License and Permit) Rules, 1981-ன்படி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Next Story