அமராவதி பாலத்தில் டூவீலர் மீது கார் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.

அமராவதி பாலத்தில் டூவீலர் மீது கார் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
அமராவதி பாலத்தில் டூவீலர் மீது கார் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். ஈரோடு மாவட்டம், மாணிக்கம் பாளையம், முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் விஜய். இவர் ஏப்ரல் 5-ம் தேதி இரவு 7:40 மணியளவில், கரூர் - பசுபதிபாளையம் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் அப்பகுதியில் ஐந்து ரோடு அருகே உள்ள அமராவதி ஆற்றுப் பாடத்தில் செல்லும்போது, எதிர் திசையில் கரூர் தெற்கு முருகநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் மகன் சத்யராஜ் வயது 38 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், விஜய் ஓட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விஜயை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக விஜய் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சத்யராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story