ஜவுளி சந்தையில் சில்லறை விற்பனை அமோகம்

X
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான மணிக்கூண்டு ரோடு, டி.வி.எஸ். வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, என்.எம்.எஸ்.காம்பவுண்ட், காமராஜர் வீதி, பிருந்தாவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளி வார சந்தை நடைபெற்று வருகிறது. தவிர, ஜவுளி குடோன்களிலும் ஜவுளி விற்பனை நடைபெறுவது வழக்கம். தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளி வார சந்தைக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து, ஜவுளி கொள்முதல் செய்து செல்வார்கள். இந்த நிலையில், இந்த வார ஜவுளிச் சந்தை நேற்று இரவு தொடங்கி இன்று மாலை வரை நடைபெற்றது.கடந்த சில வாரங்களாக வெளிமாநில வியாபாரிகள் வருகையால் மொத்த வியாபாரம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், கடந்த வாரம் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. ஆந்திராவில் இருந்து மட்டும் ஒரு சில வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் மொத்த வியாபாரம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. அதேநேரம் சில்லறை வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. இந்த வார ஜவுளி மார்கெட்டுக்கு உள்ளூர் வியாபாரிகள் வருகை மட்டுமே அதிக அளவில் இருந்தது.இதனால், இந்தவாரம் சில்லரை விற்பனை மட்டுமே 30 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதே சமயம் வெளி மாநில வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்ததால் மொத்த வியாபாரம் 10 சதவீதம் மட்டுமே நடைபெற்றது இன வியாபாரிகள் தெரிவித்தனர். அதிகரித்து காணப்பட்டது.தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் காட்டன் ரகத் துணிகள் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
Next Story

