மாம்பாக்கம் அருகே காணாமல் போன முதியவர் ஏரியில் சடலமாக மீட்பு

மாம்பாக்கம் அருகே காணாமல் போன முதியவர் ஏரியில் சடலமாக மீட்பு
X
காணாமல் போன முதியவர் ஏரியில் சடலமாக மீட்பு
ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் அடுத்த இருங்கூர் கிராமம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த சின்னப்பையன் (70) என்பவர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து காணாமல் போனார். இந்நிலையில் நேற்று தட்டச்சேரி ஏரியில் அவரது உடல் ஒதுங்கி கிடந்தது வாழைப்பந்தல் போலீசரால் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எப்படி இறந்தார் என போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story