கிருஷ்ணகிரி: மென் திறன் தொழில்நுட்பப் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா.

X
அறிஞர் அண்ணா கல்லூரியில் ஐசிடி அகாடமி & இன்போசிஸ் பவுண்டேஷன் நிறுவனமும் இணைந்து நடத்திய மென் திறன் தொழில் நுட்ப பயிற்சி 15 நாட்கள் நடந்தது. இப்பயிற்சி முகாமில் பங்கேற்ற இளங்கலை வணிக கணினி பயன்பாட்டியல் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவியர்களுக்கு முதல்வர் தனபால் தலைமை தாங்கி சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் கல்லூரியின் கல்விசார் புல ஒருங்கிணை ப்பாளர் மா ஜெகன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

