முருகன் கோவிலில் திருக்கல்யாண விழா
பெரம்பலூர்: முருகன் கோவிலில் திருக்கல்யாண விழா பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலின் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு கடந்த 2ஆம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் காப்பு கட்டி திருவிழா தொடங்கியது. தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்றது
Next Story




