தென்காசி மாவட்டத்தில் இன்று மதுக் கடைகள் மூடல்: ஆட்சியா்

X

இன்று மதுக் கடைகள் மூடல்: ஆட்சியா்
தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு மதுக் கடைகளை இன்று வியாழக்கிழமை (ஏப். 10) மூடுவதற்கு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மகாவீா் ஜெயந்தி நாளான வியாழக்கிழமை, இம்மாவட்டத்திலுள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் மது விற்பனை நடைபெறாது என்றாா் அவா்.
Next Story