உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு போட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலின் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஏப்.10) நடைபெற்றது சுமார் 750 காளைகளும், 420 மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டனர்.மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து காளைகள் கொண்டு வரப்பட்டு அவிழ்க்கப்பட்டது. வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கிராம கமிட்டியினர் சார்பில் பிரோ, கட்டில், சைக்கிள், அண்டா உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பரிசாக வழங்கப்பட்டது. போட்டியை உசிலம்பட்டி கோட்டாச்சியர் சண்முக வடிவேல் துவக்கி வைக்க, உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் சுமார் 300க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story




