உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
X
திருத்துறைப்பூண்டி கடைத்தெரு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் தலைமையில் உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கடைத்தெரு பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ₹50 உயர்த்தப்பட்டதை கண்டித்தும் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமை தாங்கினார். திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் கேஸ் விலையை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டினார்.
Next Story