விபத்து அபாயம் ஏற்படும் வகையில் ப்ளெக்ஸ் வைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விபத்து அபாயம் ஏற்படும் வகையில் ப்ளெக்ஸ் வைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
X
குமாரபாளையத்தில் விபத்து அபாயம் ஏற்படும் வகையில் ப்ளெக்ஸ் வைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு ஆகிய இடங்களில் டிவைடர் மறைக்கும் விதமாகவும், விபத்தை ஏற்படுத்தும் விதமாகவும், டிவைடருக்கு வெளியில் ரீப்பர் நீட்டிக்கொண்டு இருப்பது போலவும், பல பிளெக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பலரும் விபத்தினால் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தொடர்ந்து அசம்பாவிதம் ஏற்படும் முன், இது போன்ற ஆபத்தான முறையில் பேனர்கள் வைக்கும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story