ராசிபுரத்தில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் சிறப்பு பூஜை செய்து ஆண்கள் கோலாட்டம் அடித்து உற்சாக கொண்டாட்டம்..

X
Rasipuram King 24x7 |11 April 2025 7:31 PM ISTராசிபுரத்தில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் சிறப்பு பூஜை செய்து ஆண்கள் கோலாட்டம் அடித்து உற்சாக கொண்டாட்டம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஏப்ரல் 6.தேதி முதல் 16ஆம் தேதி வரை பத்து நாட்கள் நாயுடு பஜனை படத்தில் ஸ்ரீ ராமர் சீதாதேவி உற்சவர் விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் பஜனை மடத்தில் ஸ்ரீ ராமர் சீதாதேவி சாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக பல்வேறு பக்தி பாடல்கள் பஜனை பாடல்கள் பாடி சிறப்பாக கொண்டாடி தொடர்ந்து ஆண்கள் கோலாட்டம் அடித்து பக்தி பரவசத்துடன் ஆடி பாடி மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம், பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும் வருகின்ற 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பாதர் நாயுடு கிருஷ்ணவேணி அம்மாள் அவர்கள் இல்லத்தில் இருந்து சீர்வரிசை தட்டுகளுடன் பஜனை மடத்தில் ஸ்ரீ ராமர் சீதா திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் எனவும், புதன்கிழமை அன்று தொடர்ந்து மஞ்சள் நீராடல் ஸ்ரீ ஆஞ்சநேயர் பூஜை உடன் விழா நிறைவு பெறும். என விழா குழுவினர் தெரிவித்தனர். மேலும் ராசிபுரம் நாயுடுகள் சங்கத்தின் சார்பில் தினந்தோறும் பல்வேறு கட்டளைதாரர்கள் தொடர்ந்து ஸ்ரீ ராமர் நவமி உற்சவம் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் தலைவர் சிட்டி (எ) வரதராஜன், செயலாளர் பாலசுப்பிரமணி, பொருளாளர் ரஞ்சித், மற்றும் உப தலைவர்கள் ஜி. ராமலிங்கம் (எ) தினகர், எஸ். சீனிவாசன், இணைச் செயலாளர்கள் கே.பாபு, ஆர். சக்திவேல், எஸ். ஆர். சீனிவாசன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், நாயுடு சமூகத்தார்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story
