பாண்டிய நாட்டு உணவு திருவிழா

மதுரை அருகே பாண்டிய நாட்டு உணவு திருவிழா தனியார் விடுதியில் தொடங்கியுள்ளது.
மதுரை அவனியாபுரம் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள அமிக்கா நட்சத்திர விடுதியில் மதுரையின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றான சித்திரைத் திருவிழா வருவதை ஒட்டி அதனை கொண்டாடும் விதமாக தமிழர்களின் பாரம்பரிய வரவேற்பு வகையில் நேற்று (ஏப்.11) மாவிலை தோரணம் கட்டி, சந்தனம், குங்குமம் வழங்கி வேஷ்டி சட்டையுடன் பாண்டிய நாட்டு உணவு திருவிழாவிற்கு வந்த விருந்தினர்களை வரவேற்றனர். பாரம்பரிய உணவுகளை புதுமை சேர்க்கும் பரிமாணமாக அன்றைய தாத்தா,பாட்டி தயாரித்த உணவுகளை இன்றைய ருசிக்கேற்ப புதுமையாக உருவாக்கும் முயற்சியாக அமிக்கா ஹோட்டல் பொது மேலாளர் ஏற்பாட்டின் படி கல்லுக்கட்டி ஆட்டுக்கால் வறுவல் கல்லுக்கட்டி ஆட்டுக்கால் சூப், உப்புக்கறி, மீன் குழம்பு, வீரன் கறிசோறு, கறி தோசை உடன் மதுரை எலும்பு வறுவல் , சிறுகிழங்கு கண்டல், சுட்ட மக்காசோளம், பொறிச்ச மீன் சாலட், கறி சுக்கா, வாழை இலை அல்வா,சக்கர கட்டி ஆப்பம், கருப்பு கவுனி அரிசி அல்வா, இளநீர் பன்ன கோட்டா, பனை கிழங்கு லட்டு, கருப்பட்டி சீஸ் கேக், கம்பு தயிர் சாதம், மாடக்குளம் நாட்டு கோழி மிளகு வதக்கல், சீரக சம்பா மட்டன் பிரியாணி, மட்டன் கோலா உருண்டை , பருத்தி பால், பணங்கற்கண்டு பால், வெஜ் கோலா உருண்டை , இளநீர் பாயாசம் என 65 வகையான பழமை உணவுகளை இன்றைய மக்கள் விரும் வகையில் புதுவிதமாக தயாரித்து அதனை இந்த உணவு திருவிழாவில் பரிமாறப்பட உள்ளன.
Next Story