லாரி கவிழ்ந்ததில் டிரைவர் பலி.

X

மதுரை வாடிப்பட்டி அருகே லாரி கவிழ்ந்ததில் டிரைவர் பலியானார்.
மதுரை மாவட்டம் செக்கானுாரணி புளியங்குளத்தை சேர்ந்த கிருஷ்ணன் (24) என்பவர் லாரி டிரைவர். இவர் நேற்று (ஏப்.11) சாணாம்பட்டியில் இருந்து திண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலையில் டிப்பர் லாரியில் கற்கள் ஏற்றி வந்தார். குலசேகரன்கோட்டை ஆஞ்சநேயா கோயில் அருகே வந்தபோது முன்பக்க லாரி டயர் வெடித்ததால் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story