ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்.

மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் இன்று (ஏப்.12) தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் மதுரை மாவட்டத்தின் சார்பாக ஜல்லிக்கட்டு போட்டியினை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்தார்கள். முன்னதாக மாடுபிடி வீரர்கள் மாடு உரிமையாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகி ராஜசேகரன் சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டில் 500க்கும் மேற்பட்ட காளைகள் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள தயாராக உள்ளனர்.
Next Story