சேலம் அயோத்தியபட்டணம் ராமர் கோவில் அருகே லாரிக்கு அடியில் படுத்து தூங்கிய முதியவர் பலி

X
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினத்தில் பிரசித்தி பெற்ற ராமர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் உள்ள காலி இடத்தில் தினசரி ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்படும். அதன்படி நேற்று ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரியின் அடியில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் படுத்து தூங்கி உள்ளார். இன்று காலை அதை கவனிக்காத லாரி டிரைவர் லாரியை எடுத்த சென்றபோது லாரி சக்கரம் அவர் மீது ஏறி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அந்த நபர் இறந்துவிட்டார். இதனை பார்த்த அந்த பகுதியினர் காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி பின்னர் அவர் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

