கடலூர்: தொழுதூரில் இன்று அதிகபட்ச மழை பதிவு

கடலூர்: தொழுதூரில் இன்று அதிகபட்ச மழை பதிவு
X
கடலூர் மாவட்டத்தில் தொழுதூரில் இன்று அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் காட்டுமன்னார்கோவில் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் இன்று (12.04.2025) சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி தொழுதூர் 13 மில்லிமீட்டர், பெலாந்துறை 8.4 மில்லிமீட்டர், கீழ்செருவாய் 8 மில்லிமீட்டர், லால்பேட்டை 1.2 மில்லிமீட்டர், காட்டுமன்னார்கோவில் 1 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
Next Story