டூவீலரிலிருந்து கீழே விழுந்தவர் பலி

டூவீலரிலிருந்து கீழே விழுந்தவர் பலி
X
மதுரை உசிலம்பட்டி அருகே டூவீலரில் தடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்தவர் பலியானார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்ப நாயக்கனூர் காமராஜர் நகரில் வசிக்கும் பிரகாஷ் ராஜ்( 24) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் கடந்த 7ஆம் தேதி அய்யன்கோவில் பட்டியிலிருந்து காமராஜர் நகர் ரோடு கருப்பையா தோட்டம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது நிலை தடுமாறி இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்.12)மதியம் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி நதியா உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story