உடையாளிப்பட்டியில் தேரோட்டம்!

X

நிகழ்வுகள்
புதுக்கோட்டை: குளத்துார் தாலுகா உடையா ளிப்பட்டி வீரபாண்டவர் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேர்த்திருவிழா நடந்தது. மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள் மற்றும் மலர்க ளால் அலங்கரிக்கப்பட்ட தேரை நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந் தது. விழாவையொட்டி காலை முதலே ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும், தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து ஆண்டியப்ப சுவாமிக்கு பால், சந்தனம், குங்குமம், இளநீர், தேன், நெய், பலரசம், கரும்புச் சாறு, திரவியபொடி, பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. உடையாளிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயி ரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story