சிவகங்கையில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக பொதுக்கூட்டம்

சிவகங்கையில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக பொதுக்கூட்டம்
X
வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சிவகங்கையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது
சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் முஹம்மது இப்றாஹீம் ஃபைஜி தலைமையிலான கூட்டத்தில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன், மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி மற்றும் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். சுமார் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், ப.சிதம்பரம் பேசுகையில், "வக்ஃபு திருத்தச் சட்டம் எதிராக பல அரசியல் கட்சிகள் உங்களுக்காக நின்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்றவை இந்த சட்டத்தை எதிர்த்து உங்கள் பக்கம் இருக்கின்றன. ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டத்தை ரத்து செய்வோம்," என உறுதியளித்தார். மேலும், "உங்கள் உரிமைகளுக்கு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆவலுடன் நியாயமாக வாதிடுவார்கள். இறுதியில் நீதியின் பக்கம் தான் வெற்றி பெறும். தெருக்களில் இறங்கி போராட வேண்டாம். உங்கள் கையில் மிகப்பெரிய ஆயுதமான வாக்குரிமை இருக்கிறது. தேர்தல்களில் அதை பயன்படுத்துங்கள். 2026, 2027, 2029 ஆகிய ஆண்டுகளில் முக்கிய தேர்தல்கள் வருகின்றன. உங்கள் மதம், மரபுகளை பாதுகாக்கும் தலைவர்களை தேர்ந்தெடுக்குங்கள்," எனவும், ஜனநாயகமான வழியிலேயே உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
Next Story