திருப்பத்தூரில் நலத்திட்ட உதவி எம்எல்ஏ பங்கேற்பு

திருப்பத்தூரில் நலத்திட்ட உதவி எம்எல்ஏ பங்கேற்பு
X
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 1581 பயனாளிகளுக்கு 29 . 19 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் டாக்ட்டர் அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் விழாவில் 1581 பயனாளிகளுக்கு 29.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சியின் வாயிலாக அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர் அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவ சௌந்தரவல்லி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை சார்பாக நடைபெற்ற விழாவில் 16 துறை சார்பாக 1581 பயனாளிகளுக்கு 29.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது முன்னதாக டாக்ட்டர் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது பின்னர் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன இதில் மகளிர் சுயஉதவி கடன்.வங்கி கடன்.மற்றும் விவசாயிகளுக்கு விதை மற்றும் பெண்களுக்கு தையல் இயந்திரம்.இஸ்திரி பெட்டி உள்ளிட்ட பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் பயனாளிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்
Next Story