தமிழ்ப்புத்தாண்டையொட்டி பூக்கள் விலை உயர்வு.

தமிழ்ப்புத்தாண்டையொட்டி பூக்கள் விலை உயர்வு.
X
தமிழ்ப்புத்தாண்டையொட்டி பரமத்திவேலூர் ஏல சந்தையில் முல்லை பூ கிலோ ரூ.1,000-க்கு விற்பனை.
பரமத்திவேலூர்,ஏப்.14: பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வகை யான பூக்கள் பயிர் செய்யப் பட்டுள்ளது. இங்குவிளையும் பூக்களை விவசாயிகள் பரமத் திவேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள் ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.150-க்கும், அரளி கிலோ ரூ.250-க்கும், ரோஜா கிலோ ரூ.250-க்கும், பச்சை முல்லை பூ கிலோ ரூ.700-க்கும், வெள்ளை முல்லை பூகிலோ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.200-க்கும், கனகாம் பரம் ரூ.400-க்கும், பன்னீர் ரோஸ் கிலோ ரூ.150-க்கும். காக்கட்டான் பூ கிலோ ரூ.500-க்கும் ஏலம் போனது. இதைத்தொடர்ந்து தமிழ்ப் புத்தாண்டையொட்டி நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.700-க்கும் சம்பங்கி கிலோ ரூ.250-க்கும், அரளி கிலோ ரூ.360-க்கும். ரோஜா கிலோ ரூ.350-க்கும், பச்சை முல்லை பூ கிலோ ரூ.1,000-க்கும், வெள்ளை முல்லைபூகிலோ ரூ.700-க்கும், செவ்வந்திப்பூ ரூ.300-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், பன்னீர் ரோஸ் கிலோ ரூ.220-க்கும், காக்கட்டான்பூ கிலோ ரூ.800-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story