அரசு மருத்துவமனையில் தரமற்ற சிகிச்சை

அரசு மருத்துவமனையில் தரமற்ற சிகிச்சை
X
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தரமற்ற சிகிச்சை தந்தைக்கு அளித்ததாக மகன் வருத்தத்துடன் பேட்டி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே வேல்வார்கோட்டையை சேர்ந்தவர் அலி அக்பர் இவருடைய மனைவி ஜன்னத் நிஷா இவருடைய மகன் சையது ஆஷிக் கடந்த மார்ச் மாதம் மூன்றாம் தேதி ஜன்னத் நிஷா உடல்நல குறைவு ஏற்பட்டு இறந்து விட்டார் இந்த நிலையில் அலி அக்பர் அவர்களுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள் அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரத்த குழாயில் அடைப்பு இருக்கிறது அதை சரி செய் அளவுக்கு தந்தையின் உடல் சரி இல்லை அதனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைத்து பாருங்கள் என்று அங்கிருந்து அனுப்பி வைத்தார்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று அவருடைய மகன் சையது ஆசிப் மருத்துவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காரணத்தினால் அவரை அங்கிருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் அதிலும் அப்பாவுக்கு மூன்று மாத்திரைகள் மட்டுமே கொடுத்தனர் சுகர் பிரஷர் மாத்திரைகள் இல்லை என்று கூறினர் பிறகு நான் அவருடன் வாக்குவாதத்தை ஈடுபட்ட பிறகு மருந்துகளை கொடுத்தார்கள் வீட்டிற்கு வந்து தனது தந்தைக்கு வடமதுரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வெட்டப்பட்ட விரல்களில் புழுக்கள் வருவதை கண்டு அதிர்ச்சி அறிந்த மகன் தமிழக அரசு கட்டிடம் சேவைகள் வசதிகள் எல்லாமே சிறப்பாக இருந்தும் ஆனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முறையாக பதில் அளிப்பதில்லை என்று பாதிக்கப்பட்டவரின் மகன் பேட்டி அளித்தார் மேலும் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி மருத்துவமனையில் தனது தந்தை மட்டும் இல்லாமல் பல்வேறு நோயாளிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர் என்று மனம் நொந்து பேசியது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.
Next Story