சமையல் காஸ் உயர்வை கண்டித்து சி.பி.எம் சார்பில் கண்ட ஆர்ப்பாட்டம்

X
Komarapalayam King 24x7 |15 April 2025 11:09 AM ISTசமையல் காஸ் உயர்வை கண்டித்து குமாரபாளையம் சி.பி.எம் சார்பில் கண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சமையல் காஸ் உயர்வை கண்டித்து, ஒன்றிய அரசுக்கு எதிராக குமாரபாளையம் சி.பி.எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நகர குழு செயலர் கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினார்கள். இதில் முருகேசன் பேசியதாவது: சர்வதேச அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலை குறைந்து வரும் நிலையில், சமையல் எரிவாயு விலை உயர்வு மூலம், சுமார் 7 ஆயிரம் கோடி அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான சிறப்பு கலால் வரி அதிகரிப்பால், சுமார் 32 ஆயிரம் கோடி அளவிற்கு சுமையை பா.ஜ.க. அரசு மக்கள் தலையில் சுமத்தி இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். காஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Next Story
