டிராவல்ஸ் உரிமையாளர் மீது தாக்குதல் - ஊழியர் மீது வழக்கு பதிவு

X
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை சரவணபவன் நகர் பகுதியை சேர்ந்தவர் சோமு மகன் தமிழ்செல்வன். இவர் விஐபி டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் புதூர் பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் பாலமுருகன் என்பவர் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். அவர் மீது வழக்கு ஒன்று இருப்பது தெரியவந்த நிலையில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அவரை மீண்டும் பணியில் அமர்த்த வலியுறுத்தி தமிழ்செல்வன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை துஷ்பிரயோகம் செய்து, வாளால் தாக்கி, கொலை செய்ய முயன்றதாக நகர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story

