கொண்டாபுரம்:அரசின் சிறப்பு வரன்முறை திட்டம் ஆர்டிஓ ஆய்வு!

X

அரசின் சிறப்பு வரன்முறை திட்டம் ஆர்டிஓ ஆய்வு!
ராணிப்பேட்டை மாவட்டம் கொண்டாபுரம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் பொருட்டு அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கடேசன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொண்டாபுரத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் எத்தனை பேர் வசிக்கிறார்கள் எவ்வளவு ஆண்டுகளாக உள்ளனர் என்ற விவரங்களை கேட்டறிந்தார். வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் உடன் இருந்தனர்.
Next Story