அதியமான் கோட்டை காளியம்மன் கோவில் தேர் இழுத்தல் விழா

அதியமான் கோட்டை பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் பெரிய தேர் இழுத்தல் விழா
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் உள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு சுயம்பு காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி நடப்பாண்டிற்க்கான பங்குனி உத்திர தேர்த்திருவிழா, மார்ச் 28-ஆம் தேதி கூழ் ஊற்றி, அம்மன் சக்திகரகம் வலம் வருதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து ஏப்ரல் 9-ஆம் தேதி கும்ப பூஜை நடந்தது. 11- ஆம் தேதி கோ பூஜை மற்றும் விநாயகர் தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏப்ரல் 12-ஆம் தேதி அருள்மிகு காளியம்மன் சிறிய தேர் இழுத்தல் நிகழ்ச்சி விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அலங்கரிக்கப்பட்ட காளியம்மன் மகாரத தேரோட்ட நிகழ்ச்சி வெகுவிமர்சியாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தேரை வடம் பிடித்து இழுத்து, தேர் மீது உப்பு மிளகு தூவி பக்தர்கள் வழிபட்டனர். 21-ஆம் தேதி குதிரை வாகனத்தில் அம்மன் பந்தகாசி வீதி ஊர்வலம் நிகழ்ச்சி மற்றும் 22-ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், காளியம்மன் சிலை ஊர்வலத்துடன் கோயில் விழா நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்
Next Story