சங்கரன்கோவிலில் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை

சங்கரன்கோவிலில் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை
X
யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே களப்பா குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி பாரதிநகர் இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளது. இந்தப் பகுதிகளில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு வாறுகால் அமைக்கும் பணி நடைபெற்றபோது குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் ஒரு வருடமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை கூறப்படுகிறது. இந்நிலையில் பாரதி நகரில் சீரான குடிநீர் விநியோகம் செய்து தரக் கோரியும், வாறுகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அப்பகுதி மக்கள் நேற்று காலை சங்கரன்கோவில் யூனியன் அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகை இட்டனர். முற்றுகையிட்ட பொதுமக்களிடம் யூனியன் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இரண்டு மணி நேரம் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தால் சங்கரன்கோவில் யூனியன் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
Next Story