வாரச்சந்தையில் கால்நடைகள் விற்பனை அமோகம்
தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், புதன்கிழமை தோறும் கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் நடைபெறும் இந்த சந்தைக்கு கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.வெளி மாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், கால்டைகனை வாங்க நேற்று வந்திருந்தனர் மேலும் நேற்றைய சந்தையில், ஒரு மாடு ரூ.5,000 முதல் ரூ.34,000 வரையும், ஆடுகள் விலை 5,000 ரூபாய் முதல் 9.200 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மொத்தம் ரூ. 48 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story




