சென்​னை, புறநகர் பகு​தி​களில் வெப்​பம் தணிந்​தது: பலத்த காற்​றுடன் கொட்டி தீர்த்த கனமழை

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் நேற்று காலை திடீரென பலத்த காற்​றுடன் பரவலாக கனமழை பெய்​தது. இதனால் வெப்​பம் சற்று தணிந்​தது.
தமிழகத்​தில் பிப்​ர​வரி மாதம் முதலே வெப்​பம் வாட்​டத் தொடங்​கியது. அவ்​வப்​போது வெப்​பநிலை உயர்ந்​தும் காணப்​பட்​டது. கடந்த 12-ம் தேதி சென்னை நுங்​கம்​பாக்​கம், மீனம்​பாக்​கம் உள்​ளிட்ட 9 நகரங்​களில் 100 டிகிரி ஃபாரன்​ஹீட்​டுக்கு மேல் வெப்​பம் பதி​வாகி இருந்​தது. இந்​நிலை​யில் யாரும் எதிர்​பா​ராத வகை​யில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​பட்​டது. 9 மணிக்கு மேல் சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் லேசான தூறலுடன் மழை பெய்​யத் தொடங்​கியது. பின்​னர் கனமழை​யாக மாறியது. குறிப்​பாக, சேப்​பாக்​கம், மயிலாப்​பூர், ராயப்​பேட்​டை, வேப்​பேரி, புரசை​வாக்​கம், பெரம்​பூர், சைதாப்​பேட்​டை, கிண்​டி, ஆலந்​தூர், கோயம்​பேடு, வளசர​வாக்​கம், வடபழனி, அரும்​பாக்​கம், நுங்​கம்​பாக்​கம் மற்​றும் புறநகர் பகு​தி​களான மேட​வாக்​கம், தாம்​பரம், ஆவடி, பூந்​தமல்​லி, மீஞ்​சூர் உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் பலத்த காற்​றுடன் கன மழை பெய்தது. இதனால் பள்​ளி, கல்​லூரி​களுக்​குச் செல்​லும் மாணவர்​களும், பணிக்​குச் செல்​லும் பணி​யாளர்​களும், தனி​யார் நிறுவன ஊழியர்​களும் நேரத்​தோடு கல்வி நிறு​வனங்​கள் மற்​றும் அலு​வல​கங்​களுக்கு செல்ல முடி​யாமல் அவதிப்​பட்​டனர். கனமழை காரண​மாக மெட்ரோ ரயில்​களில் கூட்​டம் நிரம்பி வழிந்​தது. சென்​னை, புறநகர் பகு​தி​களில் பல்​வேறு சாலைகள் மற்​றும் குடி​யிருப்பு பகு​தி​களில் மழை நீர் தேங்​கியது. இதனால் பூந்​தமல்லி நெடுஞ்​சாலை, பழைய மாமல்​லபுரம் சாலை, அண்ணா சாலை, வேளச்​சேரி நெடுஞ்​சாலை, ஜிஎஸ்டி சாலை உள்​ளிட்​ட​வற்​றில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது.
Next Story