சேலம் மாநகரில் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த கட்டுப்பாடு

X
சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவை மாநகர போலீஸ் கமிஷனரின் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவுக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. அதேசமயம், விளையாட்டு, திருமணம், இறுதி ஊர்வலம் மற்றும் மத நிகழ்ச்சிகள் போன்றவைக்கு இது பொருந்தாது. இந்த கட்டுப்பாடு இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி நள்ளிரவு வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
Next Story

