மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பலி
X
மதுரை சமயநல்லூர் அருகே மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பலியானார்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே டபேதார் சந்தையை சேர்ந்த கிருஷ்ணனின் மகன் அரிச்சந்திரன் (45) என்பவர் டாட்டா ஏசி வாகனத்தில் குடிநீர் விற்பனை தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் (ஏப்.17) இரவு 11:30 மணிக்கு டபேதார் சந்தையிலிருந்து சமயநல்லூர் பர்மா காலனி சடச்சியம்மன் கோவில் தெருவில் விஷேச வீட்டிற்கு சென்று வாகனத்திலிருந்து தண்ணீரை மின்மோட்டார் மூலமாக இறக்கும் போது மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த ஹரி கிருஷ்ணனை அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பரிசோதனைக்கு உடல் பிரேத மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story