வாசுதேவநல்லூா் அருகே பேருந்து சேவை தொடக்கம்

வாசுதேவநல்லூா் அருகே பேருந்து சேவை தொடக்கம்
X
வாசுதேவநல்லூா் அருகே பேருந்து சேவை தொடக்கம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே புதிய பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சா் சிவசங்கா் தொடங்கி வைத்தாா். சங்குபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தலைமை வகித்தாா். தென்காசி மக்களவை உறுப்பினா் ராணிஸ்ரீகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஈ. ராஜா , சதன் திருமலைகுமாா், சங்கரன்கோவில் கோட்டாட்சியா் கவிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக் குழுத் தலைவா் பொன். முத்தையாபாண்டியன் வரவேற்றாா். இதில், போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் கலந்து கொண்டு சங்குபுரத்திலிருந்து சங்கரன்கோவில் ,சிவகிரி வழித்தடத்திலான பேருந்து சேவையை தொடங்கி வைத்தாா். சிவகிரி வட்டாட்சியா் ரவிக்குமாா், தி முக மாநில மருத்துவா் அணி துணைச் செயலா் செண்பகவிநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Next Story